மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! |
சேவ் சக்தி பவுண்டேஷன் என்ற அமைப்பை நடத்தி வரும் நடிகை வரலட்சுமி, அதன் மூலம் பல சமூக சேவைகளை செய்து வருகிறார். இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் விதமாக ஹெல்ப் லைன் ஒன்றை துவங்கி உள்ளார் வரலட்சுமி. இதை நடிகர் உதயநிதி துவங்கி வைத்தார். ஆக்சிஜன் பற்றாக்குறை, ஆம்புலன்ஸ் தேவை உள்ளிட்ட பல மருத்துவ தேவைக்கு இந்த சேவையை அழைக்கலாம். அதோடு, இந்த ஊரடங்கு நேரத்தில் பசியால் வாடும் ஆதரவில்லாத நாய்களுக்கு உணவளிப்பதற்காக 2 டன் உணவுப்பொருட்களையும் உதயநிதியிடம் வழங்கினார். இந்த சந்திப்பின்போது வரலட்சுமியின் தாயார் சாயாவும் உடன் இருந்தார். இதுகுறித்த தகவலை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார் வரலட்சுமி.